வன்னியர் நல அறக்கட்டளை சார்பில், சேலம் சங்கர் நகர் வன்னியர் குல சத்திரியர் திருமண மண்டபத்தில் ஐம்பெரும் விழா நடைபெற்றது. வன்னியர் அறக்கட்டளை சொத்து மீட்பு சாதனையாளரும், முன்னாள் வன்னியர் பொது சொத்து வாரியத் தலைவருமான முனைவர் ஜெயராமன், பாரத தேசத்தின் பத்மஸ்ரீ விருதாளர் தலைமை சிற்பி இராஜா காளியப்ப கவுண்டர் ஆகியோருக்கு பாராட்டு விழாவும், முன்னாள் சேலம் மாநகராட்சி செயற்பொறியாளர் முனைவர் பழனிசாமி அவர்களுக்கு பாராட்டு
விழாவும், சுதந்திர போராட்ட வீரரும், மது ஒழிப்பு போராளியுமான கவிசிங்கம் அர்த்த நாரீச வர்மாவின் 153வது பிறந்தநாள் விழாவும், ஒருமித்து ஐம்பெரும்விழாவாக கொண்டாடப்பட்டது. சேரநாட்டு கல்வி வள்ளல் சம்புகுல சேகரர் சங்கர கந்தசாமி கவுண்டர், வன்னியர் நல அறக்கட்டளை சிவலிங்கம், பொறியாளர்
சென்ன கேசவன், ரீனாடெக்ஸ் வடிவேல் குமரன், அரிசி மண்டி இரத்தினவேல், கிருஷ்ணா ரியல் எஸ்டேட் முத்து மாணிக்கம், பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் சுப்ரமணியம், சார்பதிவாளர் கோவிந்தசாமி, இரமணா அய்யனார் ரீபேக்டரீஸ் இளங்கோவன், பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் கார்மேகம், கெய்ரோ பம்ப்ஸ் சந்திரசேகரன், வட்டாட்சியர் சந்திரசேகரன், தணிக்கையாளர் சபாநாயகம், பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் ஸ்ரீராம் கல்வி நிறுவனங்கள் வேடியப்பன், முன்னாள் வன்னியர் பொதுச்சொத்து வாரிய உறுப்பினர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், வரவேற்புரையை வன்னியர் நல அறக்கட்டளை பொருளாளர் பாலசுப்ரமணியன் நிகழ்த்தினார். வன்னியர் நல அறக்கட்டளை துணைத்தலைவர் ஆறுமுகம், சேலம் யூனிக் அகாடமி நிறுவனரும் கல்வியாளருமான கோவிந்தராஜ் ஆகியோர் நெறியாளுமை செய்தனர். கவிச்சிங்கம் அர்த்த நாரீச வர்மா திருவுருவப்படதை, இரத்ணா வணிக வளாகம் இரத்தினவேலு, சேலம் பி.பி.சி.திருமண மண்டபம் பி.பி.சி.மணி,
கல்வி வள்ளல் சங்கர கந்தசாமி கவுண்டர் திருவுருவப்படதை முன்னாள் அரசு செயற்பொறியாளர் இரத்தினம், முன்னாள் டிஐஜி பதிவுத்துறை இராசமாணிக்கம், செங்கல்வராயன் அறக்கட்டளை பொன்.கலையரசன், பல்லவ சமூக நல அறக்கட்டளை தலைவர் இராம.சுகந்தன், முன்னாள் வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேச பூபதி, முன்னாள் மாவட்ட கண்காணிப்பாளர் மோகன், முன்னாள் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் துரை.விசுவநாதன், அம்மணி மருத்துவமனை இரா.சரவணன் ஆகியோர் வாழ்த்துரை
வழங்கினர்.
சந்தனக்காடு திரைப்பட இயக்குனர் கெளதமன் சிறப்புரையாற்றினார்.
முனைவர் ஜெயராமன், சேலம் மாநகராட்சி செயற்பொறியாளர் பழனிசாமி ஆகியோர் ஏற்புரையாற்றினர்.
சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் வாழ்த்துரை வழங்கியவர்களுக்கு, நினைவு பரிசும், பொன்னாடையும் அணிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வன்னியர் அறக்கட்டளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.